Posts

Showing posts from June, 2020
Image
உதிரம் கொடுத்து உயிர் காப்போம் எனும் நோக்கில் வருடா வருடம் குருநகர் புனித யாகப்பர் ஆலய யோசவ்வாஸ் இளையோர் மன்றத்தினர் இரத்ததான முகாம் நடாத்தி வருகின்றனர். இவ்வாண்டு இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்த போதாமையை கருத்திற்கொண்டு நேற்றைய தினம் (28.06.2020) குருநகர் கலாச்சார மண்டபத்தில் மாபெரும் இரத்த தான முகாம்நடைபெற்றது. இந்த உயிர் காக்கும் நிகழ்வில் அருட்தந்தையர்கள்,சமுக சேவையாளர்கள், இளைஞர்கள், யுவதிகள் என பலதரப்பட்டோர் கலந்து இரத்த தானம் செய்தனர். 61 பேர் இரத்ததான முகாமில் இணைந்து கொண்டனர்